அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இறைமறுப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள்
'விடைபெறும்'
ஹஜ்ஜின் போது (உரை நிகழ்த்திக் கொண்டிருக்கையில்) நபி (ஸல்) அவர்கள்
என்னிடம், "மக்களைச் சற்றுப் பேசாமல் இருக்கச் சொல்லுங்கள்!" என்று கூறி
விட்டு, "எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி
மாய்த்துக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள்" என்று
கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி). ( முஸ்லிம் )
"எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாய் நீங்கள் மாறி விடாதீர்கள்; (அவ்வாறு செய்யின்) உங்களுக்கு அழிவுதான்; அல்லது உங்களுக்குக் கேடுதான்" என்று விடைபெறும் ஹஜ்ஜின் போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி). (முஸ்லிம் )
No comments:
Post a Comment