*அல்லாஹ்வின் திருப்பெயரால்...*
*தேவையின்றி மூக்கை நுழைக்காதே!*
*''ஒரு மனிதர் தனக்குத் தேவையில்லாதவற்றை விட்டுவிடுவது அவரது அழகிய
இஸ்லாத்திற்கு (கட்டுப்பாட்டிற்கு) எடுத்துக்காட்டாகும்''என்று இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்.*
*அறிவிப்பாளர்: அலிய்யுப்னுல் ஹீஸைன் நூல்: மாலிக் அஹ்மத்*
*விளக்கவுரை*
*தேவையற்ற பேச்சு, நடவடிக்கைகளில் ஈடுபடலாகாது என்பதே இதன் கருத்து. அவற்றினால்
பிறரது நலன்கள் பாதிக்கப்படும் என்பது திண்ணம்! பொய், புரட்டு, புறம், கோள்,
ஏசுதல், சாபம் போன்றவை அனைத்துமே தேவையற்ற பேச்சாகும். பயனற்ற, மார்க்கத்தில்
தடுக்கப்பட்ட செயல்முறைகள் அனைத்தும் தேவையற்றவையாகும். கெடுக்கும் எண்ணத்தில்
பிறர் விஷயத்தில் தலையிடுவோரிடம், தேவையின்றி என் விஷயத்தில் மூக்கை
நுழைக்காதே! என்று பாதிக்கப்படுவோர் கூறக் கேட்கின்றோம்*.
*இறந்து விட்ட ஒரு மனிதருக்கு சுவனம் கிடைப்பதற்காக நன்மாராயம் கூறுமாறு வேண்டி
நின்ற மனிதரிடம், ''அவர் தனக்குத் தேவையில்லாத பேச்சுக்களை பேசியிருக்கலாம்;
அல்லது குறைவு செய்யக்கூடாத விஷயத்தில் கஞ்சத்தனம் செய்திருக்கலாம் என்பது
உமக்குத் தெரியாதா?'' என நபியவர்கள் திருப்பிக் கேட்டது நினைவு கூறத்தக்கது.
(அறிவிப்பாளர்: அனஸ் - நூல்: திர்மிதீ)
Popular Posts
-
ஜூதி மலைமீது தங்கிய நூஹ் நபியின் கப்பலும்; வீட்டின் மாடி மீது அமர்ந்த ஜப்பான் கப்பலும்! "பூமியே! நீ உன் நீரை விழுங்கி வ...
-
அஸ்ஸலாமு அலைக்கும் அல்குர்ஆனின் சிறப்புகள்! காலமாற்றங்கள் அல்குர்ஆனை காணடிக்க முடியவில்லை. எல்லாக் காலங்களையும் வென்றதாக எக்கால...
-
அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண...
-
மகளின் தயவில் தாய் ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி....
-
பேரழிவுகளும் பாவமன்னிப்பும் நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள் அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கு...
-
குர்ஆனின் முன்னறிவிப்புகள் கஃபா (அபய பூமி) (இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும...
-
“நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் – இன்னும் அ...
-
http://www.ziddu.com/download/12938468/TamilQuran.chm.html
-
"தன்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்து, அவளுக்கு அவர் கல்வி கற்றுக் கொடுத்து, அவளை நல்ல முறையில் நடத்தி, பிறகு அவளை விடுதலை செய்து திரும...
-
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபாரி உனக்கு அதனை (இனாமாகத்) தரலாம். அல்லது நீ அதனை...
No comments:
Post a Comment